கோவை மருதமலையில் அருகே வீடு மற்றும் வாழை தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்…!

கோவை மருதமலை வி.சி.க நகர் பகுதியில் உள்ள வீட்டை காட்டு யானைகள் சூறையாடிய நிலையில், ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்தியது.



கோவை: கோவை மருதமலை வி.சி.க நகர் பகுதியில் உள்ள வீட்டை காட்டு யானைகள் சூறையாடிய நிலையில், ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்தியது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை, மருதமலை அடிவாரம் அருகே வழக்கமாக வரும் காட்டு யானைகள் அடிக்கடி வி.சி.க நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் மலையில் இருந்து குட்டியுடன் இறங்கிய 6 காட்டுகள், வி.சி.க நகர் அருகே வந்துள்ளது.



அங்கிருந்த, பாண்டியம்மாள் (65) என்பரது வீட்டின் சுவரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

வழக்கமாக வீட்டில் பாண்டியம்மாள் மற்றும் அவரது பேரன் ரவி சுந்தர் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம் பாண்டியம்மாள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், ரவி சுந்தர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

ஆனால், நேற்று தனது கல்லூரி நண்பர் வீட்டிற்கு அவர் தூங்கச் சென்றதால் வீட்டில் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

காட்டு யானை கூட்டமானது, வி.சி.க நகர் பகுதியில் இருந்து இந்திரா நகர் வழியாக பொன்னையராஜபுரம், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் யானை மடுவில் முகாமிட்டது.



பின்னர், ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள வேணுகோபால், மலர்கொடி தம்பதிகளின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்திவிட்டு. பின்னர், நீண்ட நேரத்திற்கு பின் அந்த யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.

வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்திய யானைக் கூட்டத்தால் மருதமலை அடிவாரம் பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...