கோவையில் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி…!

சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பேரூர் மாதம்பட்டி மல்லிகைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (33). இவரது மனைவி மினிப்ரியா (30). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கிருஸ்ண பாண்டி மாதம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயக் கூலியாக வேலை செய்து வந்தார்.

இதனால் அதே தோட்டத்தில் கடந்த ஆறு வருடங்களாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். கிருஷ்ண பாண்டி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கிருஷ்ண பாண்டியை, மனைவி மினி பிரியா திட்டி அறிவுரை கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஸ்ண பாண்டி தோட்டத்தின் அருகே இருந்த கிணற்றின் சுவரில் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்த அவரை சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மீட்டு முயன்றனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அங்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி கிருஷ்ணபாண்டி உடலை சடலமாக மீட்டனர்.



சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...