தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கண்டு கண்ணீர் வடித்த வானம்!

தமிழகத்தில் 6வது நாளாக தொடரும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு தொடர் போராட்டதில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  கனமழை பெய்தது. எனினும் போராட்டக்காரர்கள் மழையினை பொருட்படுத்தாமல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வஉசி மைதானத்தில் நேற்று விடிய விடிய கொட்டிய மழையிலும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர்.



சனிக்கிழமை நாளான நேற்று பள்ளிகள் விடுமுறை என்பதால் கோவை வஉசி மைதானத்தில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தில் இன்று பெண்களின் கூட்டம் அலைமோதியது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில் இரவில் தீடீர் மழை குறுக்கிட்டதால், மழையினையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் போராட்டத்தை கைவிடாமல் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.



மழையில் பொதுமக்கள் போராடுவதை கண்டு தன்னார்வலர்கள் பலர் குடைகள் மற்றும் தார்பாய்கள் கொடுத்து உதவினர். கடும் பனியிலும், மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெய்த திடீர் மழையின் காரணமாக இளைஞர்கள் பலர் அவிநாசி சாலையில் உள்ள சாலை ஓரங்களில் படுத்தும் வருகின்றனர்.



மேலும், நேற்று மாலை தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் முயற்சியில் ஜல்லிகட்டிற்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இந்த அவசர சட்டம் நிரந்தரம் அல்ல என்றும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்க்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தமிழக முழுவதும் உள்ள போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...