சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் ஐந்து நாட்கள் கோரியிருந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.




இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் தொடர்பான மேலும்தகவல்களை சேகரிக்கும் நோக்கில் இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சூலூர் போலீசார் கோவை POCSO நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.




இதையடுத்து, கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள POCSO நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பகவதி அம்மாள், நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் இருவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், காவல்துறை தரப்பில் ஐந்து நாட்கள் காவல் கோரப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.




முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் இருந்து தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், சம்பவத்தன்று சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கார்த்திக் மற்றும் மோகன்ராஜை சாட்சிகள் அடையாளம் காட்டியிருந்தனர்.




சம்பவம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், காவல் விசாரணையின் போது கூடுதல் ஆதாரங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றத்தில் தொடர்புடைய பிற விவரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....