பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முதுகலைப் படிப்புகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளில் நிறைவடைய வேண்டிய முதுகலைப் படிப்புகளுக்கு இதுவரை முறையாக வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றும், இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளில் இரண்டு பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை ஜூன் 25-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பல்கலைக்கழகம் அறிவித்ததையடுத்து, மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணம், நான்காம் பருவத் தேர்வுக்கான கட்டணமாக இணையதளத்தில் பதிவாகியுள்ளதாகவும், இதையடுத்து மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், பாடப்புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் பல்கலைக்கழகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த ஆண்டுக்குள் மூன்றாம் மற்றும் நான்காம் பருவத் தேர்வுகள் நடைபெற்று படிப்பு நிறைவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, அபராதத்தை ரத்து செய்து, தொலைதூரக் கல்வி மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...