சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் ஐந்து நாட்கள் கோரியிருந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.




இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் தொடர்பான மேலும்தகவல்களை சேகரிக்கும் நோக்கில் இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சூலூர் போலீசார் கோவை POCSO நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.




இதையடுத்து, கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள POCSO நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பகவதி அம்மாள், நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் இருவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், காவல்துறை தரப்பில் ஐந்து நாட்கள் காவல் கோரப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.




முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் இருந்து தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், சம்பவத்தன்று சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கார்த்திக் மற்றும் மோகன்ராஜை சாட்சிகள் அடையாளம் காட்டியிருந்தனர்.




சம்பவம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், காவல் விசாரணையின் போது கூடுதல் ஆதாரங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றத்தில் தொடர்புடைய பிற விவரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...