அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து  நிலையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், சௌவுரிபாளையம் ஆகிய பகுதிகளில் பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டது.



இது குறித்து அவர்கள் கூறும்போது, 56 வார்டு பகுதியில் பாதாள சாக்கடைக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு பணி நிறைவேறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமதிற்கு உள்ளாவதுடன் விபத்துகள் ஏற்படுவதாக கூறினர். மேலும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சக்கடை குப்பைகளால் சுகாதார கேடு எற்படுவதாக குற்றம் சாட்டினர். 66வது வார்டு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதுடன் தண்ணீர் தேக்கத்தால் சாலைகள் பழுதடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறியவர்கள் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி சத்துணவு கூடம் அருகிலேயே சாக்கடை கால்வாய் ஓடுவதால் அங்கு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...