கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்சிப்பதால், சுமார் 6,000 மக்கள் வசிக்கும் பகுதியில் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பி திட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி தீர்மானம் ஏதும் இல்லாமல் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நுண்குப்பை உரமாக்கும் மையம் மற்றும் திடக்கழிவு பிரித்தல் மையம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.



சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் மேல்நிலை தொட்டிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இங்கு குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்சிப்பது பொதுமக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குப்பை மையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளதுடன், துர்நாற்றம், ஈ, கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் காரணிகளால் டெங்கு, மலேரியா, சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் தனியார் மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளதால், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு




இத்திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தில் மட்டுமே திடக்கழிவு மேலாண்மை மையங்களை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி, திட்டத்தை நிரந்தரமாக கைவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...