தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன்னேற்ற சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கனவை முன்னெடுக்கும் வகையில், சந்திராபுரம் கிராமத்தில் ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.


Coimbatore: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையை ஊக்குவிக்கவும், தாராபுரம் அருகேயுள்ள சந்திராபுரம் கிராமத்தில் ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன்னேற்ற சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கனவை முன்னெடுக்கும் வகையில், சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ம. பாலசுப்ரமணியம் தலைமையில் இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ம. பாலசுப்ரமணியம் கூறுகையில், தற்போதைய சூழலில் விவசாயம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது அவசியமாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த பண்ணைய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏபிடி சொசைட்டி மற்றும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், மாதிரி பண்ணைகள், தரமான உள்ளீட்டுப் பொருட்கள் மற்றும் சந்தை சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்கி, ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். முதற்கட்டமாக சந்திராபுரத்தை முன்னோடி மாதிரி கிராமமாக உருவாக்கி, அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சேவை மையத்தின் மூலம் காய்கறி சாகுபடி, கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடிகள், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கோழி, ஆடு, மீன், காளான் மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதனுடன், பயிற்சிகள், மாதிரி பண்ணைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும், கால்நடைகளுக்குத் தேவையான தரமான தீவனங்கள் மற்றும் உபகரணங்கள் சேவை மையத்தின் மூலம் கிடைக்கச் செய்யப்படுவதுடன், கிராமப்புற குழந்தைகளுக்கான ஒற்றை ஆசிரியர் கல்வி மையங்கள் மற்றும் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திறன் மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

துவக்க விழாவிற்கு ம. பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வினோதினி பாலசுப்ரமணியம், சம்யுக்தா சங்கர் வாணவராயர், சுருதி, அம்ரித் விஷ்ணு, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஏபிடி சேவை மைய அலுவலர்கள், ஊழியர்கள், சந்திராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள், ஏபிடி சொசைட்டி மற்றும் சேவை மையத்தின் செயல்பாடுகள் விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதோடு, கிராமப்புற வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து, திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...