தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சிபடி நடந்துகொள்ள வேண்டும் என எஸ்.பி.வேலுமணி பேட்டி

இயற்கையாகவே உள்ள குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்வதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சி படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மென்பொருள் உருவாக்கத்தின் இறுதி போட்டியின் துவக்கத்தில் கலந்து கொண்ட பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பல நூறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. 

இந்த குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்' என்றார். 

இதைத்தொடர்ந்து, அமைச்சர் தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் போராடி வருவது தொடர்பாக கேட்டதற்கு, திமுகவினர் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்கின்றனர். பல்வேறு திட்டங்களை தான் தொகுதிக்கு செய்து உள்ளேன். எனவே தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் அவர்களின் மன சாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், கோவைக்காக மோனோ அல்லது மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன் என்றார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...