தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சிபடி நடந்துகொள்ள வேண்டும் என எஸ்.பி.வேலுமணி பேட்டி

இயற்கையாகவே உள்ள குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்வதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சி படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மென்பொருள் உருவாக்கத்தின் இறுதி போட்டியின் துவக்கத்தில் கலந்து கொண்ட பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பல நூறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. 

இந்த குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்' என்றார். 

இதைத்தொடர்ந்து, அமைச்சர் தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் போராடி வருவது தொடர்பாக கேட்டதற்கு, திமுகவினர் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்கின்றனர். பல்வேறு திட்டங்களை தான் தொகுதிக்கு செய்து உள்ளேன். எனவே தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் அவர்களின் மன சாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், கோவைக்காக மோனோ அல்லது மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன் என்றார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...