கோவை அரசு கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவு கலந்தாய்வு; சிறப்பு பிரிவினர் 21 பேர் சேர்ப்பு

கோவை: கோவை அரசு கலை கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கு இன்று நடந்த சிறப்பு கலந்தாய்வில் 21 இடங்கள் நிரப்பப்பட்டது.



கோவை: கோவை அரசு கலை கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கு இன்று நடந்த சிறப்பு கலந்தாய்வில் 21 இடங்கள் நிரப்பப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல் உள்பட மொத்தம் 20 பாட பிரிவுகள் உள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் நடப்பாண்டில் 552 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு, 1999 பேர் விண்ணப்பித்திருந்தனர்.



இதையடுத்து, இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், விளையாட்டு பிரிவு, முன்னாள் வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என மொத்தம் 43 இடங்கள் இருந்தது.



அதன்படி, விளையாட்டு கோட்டாவுக்கு 151 பேரும், முன்னாள் படைவீரர்களின் மகன் அல்லது மகள் கோட்டாவுக்கு 13 பேரும், மாற்றுதிறனாளிகள் கோட்டாவுக்கு 24 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.



இவர்களுக்கான, கலந்தாய்வு அந்தந்த துறைகளில் இன்று நடந்தது.



இதன் மூலம் மொத்தம் 21 இடங்கள் நிரப்பப்பட்டது. நாளை பொது பிரிவினர்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...