மண் வளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும், இது காலத்தின் கட்டாயம் மண் வளத்தை காப்பது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கோவை: ஈஷா யோக மையம் மண் காப்போம் இயக்கம் சார்பில் சத்குரு மண் வளத்தை காக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் 30-ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் தொடங்கி இன்று இந்தியாவுக்குள் இன்று நுழையும், சத்குருவை வரவேற்கும் விதமாகவும், உலக அளவில் மண் தரம் குறைந்து வருவதால் மண்வளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், ஈசா யோகா மையம் மற்றும் பொள்ளாச்சிதடகள சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய மாரத்தான் போட்டியை நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய ஓட்டம் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள PA பாலிடெக்னிக்கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர்.வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உலக அளவில் மண்தரம் குறைந்து கொண்டே வருகிறது. இதை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் மண் வளத்தைமீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் இது காலத்தின் கட்டாயம் மண் வளத்தை காப்பது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் லண்டனில் தொடங்கி இன்று இந்தியாவுக்குள் இன்று நுழையும், சத்குருவை வரவேற்கும் விதமாகவும், உலக அளவில் மண் தரம் குறைந்து வருவதால் மண்வளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், ஈசா யோகா மையம் மற்றும் பொள்ளாச்சிதடகள சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய மாரத்தான் போட்டியை நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய ஓட்டம் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள PA பாலிடெக்னிக்கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர்.வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உலக அளவில் மண்தரம் குறைந்து கொண்டே வருகிறது. இதை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் மண் வளத்தைமீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் இது காலத்தின் கட்டாயம் மண் வளத்தை காப்பது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.