நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள மருதூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம்மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில், இரவு நேரத்தில் மட்டும் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருக்கும்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இருவரில், ஒருவர் வெளியில் இருந்து கண்காணிக்க, மற்றொருவர் ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் நுழையும் முன்பு அலாரம் ஒயரை துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது,அலாரம் ஒலிக்கவே, இருவரும் தங்களது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இருவரில், ஒருவர் வெளியில் இருந்து கண்காணிக்க, மற்றொருவர் ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் நுழையும் முன்பு அலாரம் ஒயரை துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது,அலாரம் ஒலிக்கவே, இருவரும் தங்களது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.