கோவை காரமடை எஸ்.பி.ஐ.வங்கி ஏ.டி.எம் இல் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் தப்பிய மர்ம நபர்…!

நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள மருதூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம்மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில், இரவு நேரத்தில் மட்டும் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருக்கும்.



இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.



இருவரில், ஒருவர் வெளியில் இருந்து கண்காணிக்க, மற்றொருவர் ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் நுழையும் முன்பு அலாரம் ஒயரை துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது,அலாரம் ஒலிக்கவே, இருவரும் தங்களது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...