திருப்பூர் பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் டயர் வெடித்ததில் லோடுமேன் சம்பவ இடத்திலேயே பலி..!

உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் டயர் வெடித்ததில் லோடுமேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுனர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மதுரையிலிருந்து விறகு பாரம் ஏற்றி கொண்டு பல்லடத்திற்கு வந்த லாரியை அபூபக்கர் என்பவர் ஓட்டி வந்தார். பல்லடம்பனப்பாளயத்தை சேர்ந்த லோடுமேன் வீராசாமி என்பவரை அழைத்துக் கொண்டு விறகுகளை இறக்க சென்று கொண்டிருந்தனர்.

உடுமலை சாலையில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்ற போது சக்கரங்களைப் பரிசோதித்தனர். லாரியின் பின்புற சக்கரத்தை லோடுமேன் வீராசாமி சோதனை செய்த போது திடீரென லாரியின் டயர் வெடித்தது.



இதில் லோடுமேன் வீராசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுனர் அபுபக்கர் காயமடைந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அபுபக்கரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



வீராசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...