விளாங்குறிச்சி ரோட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆய்வு - தரமற்ற தார் சாலை குறித்து புகார் தெரிவிக்க முடிவு!

விளாங்குறிச்சி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் தரமற்ற நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையரை சந்தித்து புகார் தெரிவிக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.


கோவை: விளாங்குறிச்சி ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.



ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது: விளாங்குறிச்சி ரோட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலை பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழைக்கே புதிதாக அமைக்கப்பட்ட ரோடு தாக்குப் பிடிக்கவில்லை. பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து புகார் செய்ய முடிவு செய்துள்ளோம். பல கோடி ரூபாய் செலவில் புதிய தார்சாலை அமைக்கும் பணி சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்வரும் ஆண்டுகளுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...