நூல் விலை உயர்வுக்கு எதிராக இன்று திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்..!

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்புகள் நடத்தும் (மே-16, 17) இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு 360-கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (மே-16,17) இன்றும் நாளையும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக நூல் விலை அபராதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில், இம்மாதம் கிலோ 40-ரூபாய் வரை விலை உயர்ந்து 470-ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும், உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதிக்கான வருகை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-மற்றும் 17-தினங்களில் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது. திருப்பூரில் மட்டும் சுமார் 10-ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதன் காரணமாக நாளொன்றுக்கு 360-கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேபோல, நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை உயர்வால் உற்பத்தி செய்துள்ள காடா துணிகளுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்ய முடியாமல் ஏற்கனவே 100-கோடி ரூபாய் அளவிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டமும் நாளைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...