கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடுக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய நவீன செயல்முறைகள் பின்பற்றுவது தொடர்பாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.


Coimbatore: கோவையில் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் (IWMA) சார்பில், கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்சி செய்து மீள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

'கழிவு மேலாண்மையில் நெட் ஜீரோ' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து பேசுகையில், தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, ஆபத்தான கழிவுகளை கையாளுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும்,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தொழில்துறையினரின் நடவடிக்கைகள் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் சி.ஐ.ஏ. தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் துணைத் தலைவர் தியாகராஜன், இணை செயலாளர் நடராஜன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த திட்டங்கள், தூய்மையான ஆற்றல் மாற்றம், கழிவிலிருந்து வள மீட்பு, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கான நிதி மற்றும் மானிய வாய்ப்புகள் குறித்த சிறப்பு அமர்வுகளும் கருத்தரங்கில் இடம்பெற்றன.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...