திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்..!

கடையை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள் புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.



நியாயவிலைக்கடைகளை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் அடையாள அட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் போது தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டால் உரிய பதிவேட்டில் குடும்ப அட்டைதாரர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.

மண்ணெண்ணெய் பேரல்கள் மற்றும் உரங்கள் அருகில் அத்தியாவசியப் பொருட்களை வைக்கக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...