கடையை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்: பல்லடம் அருகே தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள் புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

நியாயவிலைக்கடைகளை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் அடையாள அட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் போது தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டால் உரிய பதிவேட்டில் குடும்ப அட்டைதாரர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.
மண்ணெண்ணெய் பேரல்கள் மற்றும் உரங்கள் அருகில் அத்தியாவசியப் பொருட்களை வைக்கக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள் புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
நியாயவிலைக்கடைகளை உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தைத் தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்க வேண்டும், இதனை தினமும் தவறாது எழுதிப் பராமரிக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் அடையாள அட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் போது தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டால் உரிய பதிவேட்டில் குடும்ப அட்டைதாரர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.
மண்ணெண்ணெய் பேரல்கள் மற்றும் உரங்கள் அருகில் அத்தியாவசியப் பொருட்களை வைக்கக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.