கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான கார்த்திக் மீது கோவை மத்திய சிறையில் சக கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், மூவரை வேறு சிறைக்கு மாற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கைது செய்யப்பட்ட கார்த்திக், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது வலது கை மற்றும் காலில் காயமடைந்ததால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை கார்த்திக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை மத்திய சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், நந்து என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட நவீன்குமார், ஜீவா என அழைக்கப்படும் ஜீவானந்தம், மகாவீர் என்ற பெயரில் அறியப்படும் மகாதேவன், கணேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், முன்னெச்செரிக்கை நோக்கத்திலும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் மூன்று கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நவீன்குமார் வேலூர் மத்திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் சிறை நிர்வாகத்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...