கோவையில் தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்ப் சரிந்து விழுந்து விபத்து - தொழிலாளி பலி…!

படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவையில் தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்ப் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் மாறன். இவரது மகன் தங்கராஜ் (38). திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மேலும், தங்கராஜ் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் கடந்த 5-ஆண்டுகளாகத் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கராஜ் அந்த நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது மோட்டார்கள் அடுக்கி வைத்திருந்த ரேக்கை, டிராலி வண்டி மூலம் சூப்பர்வைசர் மணி தூக்கி உள்ளார். அப்போது மோட்டார் வைத்து இருந்தரேக் சரிந்து தங்கராஜ் மீது விழுந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த தங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உரிய பாதுகாப்பு வழங்காமல் அஜாக்கிரதையாக பணியாற்றிய வடமாநில தொழிலாளி சரண் பக்கட் மற்றும் சூப்பர்வைசர் மணி ஆகியோர் மீதுதுடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...