படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவையில் தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்ப் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் மாறன். இவரது மகன் தங்கராஜ் (38). திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும், தங்கராஜ் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் கடந்த 5-ஆண்டுகளாகத் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கராஜ் அந்த நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது மோட்டார்கள் அடுக்கி வைத்திருந்த ரேக்கை, டிராலி வண்டி மூலம் சூப்பர்வைசர் மணி தூக்கி உள்ளார். அப்போது மோட்டார் வைத்து இருந்தரேக் சரிந்து தங்கராஜ் மீது விழுந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த தங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உரிய பாதுகாப்பு வழங்காமல் அஜாக்கிரதையாக பணியாற்றிய வடமாநில தொழிலாளி சரண் பக்கட் மற்றும் சூப்பர்வைசர் மணி ஆகியோர் மீதுதுடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் மாறன். இவரது மகன் தங்கராஜ் (38). திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும், தங்கராஜ் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் கடந்த 5-ஆண்டுகளாகத் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கராஜ் அந்த நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது மோட்டார்கள் அடுக்கி வைத்திருந்த ரேக்கை, டிராலி வண்டி மூலம் சூப்பர்வைசர் மணி தூக்கி உள்ளார். அப்போது மோட்டார் வைத்து இருந்தரேக் சரிந்து தங்கராஜ் மீது விழுந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த தங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உரிய பாதுகாப்பு வழங்காமல் அஜாக்கிரதையாக பணியாற்றிய வடமாநில தொழிலாளி சரண் பக்கட் மற்றும் சூப்பர்வைசர் மணி ஆகியோர் மீதுதுடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.