கோவையில் நடைப்பெற்ற 'நலம்' இலவச மருத்துவ முகாமில் 500-பேர் பயன்..!

ராஜ வீதியில் நடந்த நலம் இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


கோவை: கோவை, ராஜ வீதியில் நடந்த "நலம்" இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.



முன்னதாக இந்த நிகழ்ச்சியை பா.ஜ.க முன்னாள் உக்கடம் மண்டல தலைவர் சேகர் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி சுரபி ஜுவல்லர்ஸ் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மராட்டா பவன் தலைவர் லக்ஷ்மன் துக்காராம் பாட்டில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், இதில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் தலைவர் R.ராஜேஷ்குமார், வோர்ல்டு மலையாளி கவுன்சில் செயலாளர் C.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மக்கள் சேவை மையம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் உலக மலையாளிகள் சமாஜம் சார்பில், 'நலம்' என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் ராஜ வீதி, தேர்முட்டி திடல் அருகே துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.



இதில், பொது மருத்துவம், மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைமருத்துவம், தோல் நல மருத்துவம், குடல் அறுவை சிகிச்சை மருத்துவம், கண் நலம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியதுடன், தேவையான நபர்களுக்கு மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டது.



இதில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கோவையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டில் நடைபெறும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது வாரமாக ராஜவீதியில் உள்ள துணி வணிகர்கள் பள்ளியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், இறுதியில் பா.ஜ.க முன்னாள் மாவட்ட செயலாளர் கண்மணி பாபு நன்றி கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...