கோவையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - தந்தை, மகன் பலி…!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை காரமடை பெல்லாத்தி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26), தனியார் மில்லில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மிருதுளா ஸ்ரீ (25) மகன் சாய்தக்சன் (5).

தற்போது அன்னூர் ஒரிக்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். பிரகாஷ் தனது குடும்பத்தோடு நேற்று காரமடை சென்றுவிட்டு மீண்டும் தங்களது இருசக்கர வாகனத்தில் இரவு 11-மணிக்கு 3-பேரும் அன்னூர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது ஒரிக்கல்பாளையம் பிரிவு வந்து சாலையை கடக்க முயன்ற போது, கோவை - சக்தி சாலையில் அதிவேகமாக வந்த கார் பிரகாஷ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் படுகாயத்துடன் சாலையில் கிடந்தனர்.

இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு 108- ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரகாஷ் மற்றும் சாய் தக்சன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மிருதுளா ஸ்ரீ மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த அன்னூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அன்னூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...