தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்றும், இன்றும் முத்தமிழ் விழா நடந்தது.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா நேற்றும், இன்றும் நடைபெற்றது.

அதன் முதல் நாளன்று, சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியா வெ. கீதாலட்சுமி தலைமையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு விழாவானது தொடங்கியது.
மாணவா்களின் கலைத் திறமையை வெளிப்படுத்தும் விதம் அமைக்கப்பட்ட வண்ணக் கலைக் கண்காட்சி, வாசனை பொருள் மற்றும் பூக் கோலங்களை துணைவேந்தர் பேராசிரியா வெ. கீதாலட்சுமி பார்வையிட்டார்.
பின்னர், சிறப்புரையில் மாணவர்களின் கலைத் திறமையைப் பாராட்டியதோடு, தன் கல்லூரி அனுபவங்களையும் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். மேலும், கல்லூரியின் அறுவடைக்கு பின்னர் தொழில்நுட்ப பின்செய் நேர்த்தி துறை ஆய்வகத்தையும் திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதன்மையர் முனைவர். த. ஆறுமுகம் தலைமையுரை வழங்கினார். தொடக்க விழாவில், பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹா் கலந்து கொண்டு "அமுதும் தமிழும்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
கவிக்கதம்ப நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞா் அறிவுமதி கலந்து கொண்டு மாணவர்களின் கவித்திறமையைப் பாராட்டினார்.

இவ்விழாவினை மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர். பெ. கீதாராணி அவா்களோடு மாணவர் மன்ற செயலர் (நான்காம் ஆண்டு) அ. வெங்கடேஷ் பிரசாத் மற்றும் மாணவர் மன்ற துணை செயலர் அ.மே. ஜீனோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன் முதல் நாளன்று, சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியா வெ. கீதாலட்சுமி தலைமையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு விழாவானது தொடங்கியது.
மாணவா்களின் கலைத் திறமையை வெளிப்படுத்தும் விதம் அமைக்கப்பட்ட வண்ணக் கலைக் கண்காட்சி, வாசனை பொருள் மற்றும் பூக் கோலங்களை துணைவேந்தர் பேராசிரியா வெ. கீதாலட்சுமி பார்வையிட்டார்.
பின்னர், சிறப்புரையில் மாணவர்களின் கலைத் திறமையைப் பாராட்டியதோடு, தன் கல்லூரி அனுபவங்களையும் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். மேலும், கல்லூரியின் அறுவடைக்கு பின்னர் தொழில்நுட்ப பின்செய் நேர்த்தி துறை ஆய்வகத்தையும் திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதன்மையர் முனைவர். த. ஆறுமுகம் தலைமையுரை வழங்கினார். தொடக்க விழாவில், பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹா் கலந்து கொண்டு "அமுதும் தமிழும்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
கவிக்கதம்ப நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞா் அறிவுமதி கலந்து கொண்டு மாணவர்களின் கவித்திறமையைப் பாராட்டினார்.
இவ்விழாவினை மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர். பெ. கீதாராணி அவா்களோடு மாணவர் மன்ற செயலர் (நான்காம் ஆண்டு) அ. வெங்கடேஷ் பிரசாத் மற்றும் மாணவர் மன்ற துணை செயலர் அ.மே. ஜீனோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.