திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறைகேடு..? நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் விநியோகிப்பது இல்லை என குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை சொசைட்டிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் நியாய விலை கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருளை வழங்க மறுத்து, தற்போது இருப்பு இல்லை எனவும் மாதக் கடைசியில் வந்து வாங்கிச் செல்லுமாறு, பணியாளர்கள் பொதுமக்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.



இதுபோல, ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை சொசைட்டிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் நியாய விலை கடையின் முன்பு நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை சொசைட்டிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வாங்காமலே, வாங்கியதாக குறுந்தகவல் வருகிறது. இதுகுறித்து கேட்டால் முறையாக பதிலளிக்காமல் மிரட்டும் தொணியில் அலுவலர்கள் பேசுவதாக, மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர், என்றனர்.

எனவே, கடைக்கு ஒதுக்கீடு செய்துள்ள குடும்ப அட்டை மற்றும் 'அ' பதிவேடு பொருட்கள் இருப்பு விற்பனை பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



மேலும், புகாருக்குள்ளான ரேஷன் கடை ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு ஊழியரை மாற்ற வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டநாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் வலியுறுத்தினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...