இசைஞானியின் 80 ஆவது பிறந்தநாள்: கிரீன் கிளீன் அமைப்பு சார்பில் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி..!

இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி, கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிரீன் கிளீன் அமைப்பினர் அறிவிப்பு.



கோவை: இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி, கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிரீன் கிளீன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக கோவையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர், இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் வருகிற ஜூன் இரண்டாம் தேதி கொண்டாடப்படுவதாகவும், அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில், கிரீன் கிளீன் என்ற அமைப்பு சார்பில், நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டனர்.

கிரீன் கிளீன், என்ற தங்களது அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் ஆற்றி வருவதாகவும், தற்போது சுற்றுச்சூழலை மையப்படுத்தியே இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.

பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் அதிக அளவில் மரங்களை நட்டு அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த இசை நிகழ்ச்சியில், இளையராஜா பங்கேற்பார் என்றும் தென்னிந்திய இசை உலகில் முன்னணி பாடகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று அறிவித்தனர்.

15,000 முதல் 20 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளவர் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நிகழ்ச்சியில், சாமானிய மக்களும் பங்கேற்கும் வகையில் குறைந்த அளவிலான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.



முன்னதாக, இசை நிகழ்ச்சிக்கான முத்திரை மற்றும் போஸ்டர் ஆகியவற்றையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...