ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் - கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை நீலம்பூர் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய அவர், "இந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்? தமிழ் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் எத்தனை பேர்? தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும். தாய் மொழியை கற்றுகொண்டு, இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள். ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசி பழகுவது நல்லது.

பிறந்த குழந்தை 6 மாதத்திற்கு தன்னுடைய அம்மாவின் தாய்ப்பாலை குடித்தால் தாய் சொல்லை கேட்பார்கள். இப்போதெல்லாம், தாய்ப்பால் குடிப்பதில்லை, கன்று குட்டியின் பாலைத்தான் குடிக்கிறார்கள். அதனால்தான் இளைஞர்கள் தாயின் சொல்லைக் கேட்காமல் டாஸ்மாக்கில் போய் குடிக்கிறார்கள். 10 கோடி பேர் இந்தியாவில் போதைக்கு அடிமையாக உள்ளார்கள்", என்றார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.. திராவிட மாடல் போல திராவிட மாதிரி என இருந்தால் சரியாக இருக்குமோ? என எண்ணுகிறேன். தாய்மொழியில் முழுமையாக இருக்க வேண்டும். திராவிட மாடல் (ஆங்கில சொல்) என்று சொல்வதற்கு திராவிட மாதிரி (தமிழ் சொல்) என சொன்னால் சரியாக இருக்குமோ என்பது எனது யோசனை.

மற்ற மொழியை வேண்டாம் என சொல்வதற்கு நம்ம மொழியை முழுவதும் கற்றுக்கொள்வோம்", என்றார்.

புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து, என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...