கோவை ராம் நகர் பகுதியில் 63 வருட பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா சிறப்பாக நடைபெற்றது
கோவை: கோவை ராம் நகர் பகுதியில் 63 வருட பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா சிறப்பாக நடைபெற்றது.
கோயில் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில், வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழங்க ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இறைவனை ஒளி வடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும், அம்மனுக்கு மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், சிம்ம வாகனம் புறப்பாடு, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடுதல், அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.