திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு: எத்திலீன் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதில் எத்திலீன் மூலம் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: மாம்பழ சீசன் துவங்கியுள்ள சூழலில் அனைத்து பல கடைகளில் மாம்பழங்கள் குவியத் தொடங்கியுள்ளது.

சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், பங்கனபள்ளி, இமாம் பசந்த், நடுச்சாலை என பல ரகங்களில் மாம்பழங்கள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் கெமிக்கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து, திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் திருப்பூர் அரிசி கடை வீதி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மாம்பழ கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வில், நான்கு கடைகளில் சுமார் 2 டன் மதிப்புள்ள மாம்பழங்களை எத்திலீன் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாம்பழங்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை அழித்தனர். மேலும், அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எத்திலீன் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை உண்டால் பல்வேறு உடல் உபாதைகள் வரும் என்பதால், அடிக்கடி உணவுத்துறை அதிகாரிகள் இதுபோல் ரெய்டு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...