கோவையில் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயதான முதியவரை செட்டிபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை: கோவையில் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் குப்புச்சாமி (63). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 ஆம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். பின்பு, சிறுவனின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் குப்புசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர், ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்தவர் குப்புச்சாமி (63). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 ஆம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். பின்பு, சிறுவனின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் குப்புசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர், ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.