தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நடத்தப்படும் 130, 131 ஆவது நாய் கண்காட்சி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. காவல்துறை, ரயில்வே துறையினர் பயிற்சி அளித்த மோப்ப நாய்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
நீலகிரி: ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில்,'தென்னிந்திய கென்னல் கிளப்' சார்பில், 130, 131 வது நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.
வரும் 8ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 9 ரகங்களில், 600 நாய்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. நாட்டு நாய் வகையான, ராஜபாளையம் போன்ற நாய்கள் அதிகளவில் பங்கேற்கவுள்ளது.
மேலும், தனியார் போட்டியாளர்களுடன், காவல்துறை, ரயில்வே துறையினர் பயிற்சி அளித்த மோப்ப நாய்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 8ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 9 ரகங்களில், 600 நாய்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. நாட்டு நாய் வகையான, ராஜபாளையம் போன்ற நாய்கள் அதிகளவில் பங்கேற்கவுள்ளது.
மேலும், தனியார் போட்டியாளர்களுடன், காவல்துறை, ரயில்வே துறையினர் பயிற்சி அளித்த மோப்ப நாய்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.