மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்ற போது யானை, வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலிருந்து பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படக் கூடிய காட்டு யானை கடந்த 10 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
விளை நிலங்களுக்கு உள்ளே புகுந்து வருகிறது பயிர்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானை, சமயபுரம் நெல்லிதுறை குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்றனர். அப்போது, டார்ச் லைட்டுகள் வைத்து வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்ட முயன்றபோது அது திடீரென வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டிச் சென்றது.
இதனால், அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அங்கிருந்து தள்ளிச் சென்றனர். இதுவரை காட்டு யானை பாகுபலி யாரையும் தாக்கியது இல்லை என்ற கூறப்பட்டு வந்த நிலையில், யானை வனத்துறையினரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் யாருக்கேனும் ஆபத்து ஏற்படும் முன், காட்டு யானை பாகுபலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விளை நிலங்களுக்கு உள்ளே புகுந்து வருகிறது பயிர்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானை, சமயபுரம் நெல்லிதுறை குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்றனர். அப்போது, டார்ச் லைட்டுகள் வைத்து வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்ட முயன்றபோது அது திடீரென வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டிச் சென்றது.
இதனால், அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அங்கிருந்து தள்ளிச் சென்றனர். இதுவரை காட்டு யானை பாகுபலி யாரையும் தாக்கியது இல்லை என்ற கூறப்பட்டு வந்த நிலையில், யானை வனத்துறையினரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் யாருக்கேனும் ஆபத்து ஏற்படும் முன், காட்டு யானை பாகுபலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.