வரும் 20ஆம் தேதி ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: ஆண்டுதோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 20 ஆம் தேதி ஊட்டியில் மலர் கண்காட்சி துவங்குகிறது. இந்த மலர் கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து வரும் 19 ஆம் தேதி கோவை வருகை வரவுள்ளார். அன்னூர் அருகே பெரியபுத்தூரில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் புதிய போர் வெல்களை, முதல்வர் இயக்கி துவக்கி வைக்க உள்ளார்.
மேலும், பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் விவசாயிகளுடன், முதல்வர் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையினரும் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் போர்வெல்கள் அமைய உள்ள மதுவாணன் குட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ள பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தையும் ஆய்வு செய்தார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்காக சென்னையில் இருந்து வரும் 19 ஆம் தேதி கோவை வருகை வரவுள்ளார். அன்னூர் அருகே பெரியபுத்தூரில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் புதிய போர் வெல்களை, முதல்வர் இயக்கி துவக்கி வைக்க உள்ளார்.
மேலும், பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் விவசாயிகளுடன், முதல்வர் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையினரும் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் போர்வெல்கள் அமைய உள்ள மதுவாணன் குட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ள பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தையும் ஆய்வு செய்தார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.