ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வரும் 20ஆம் தேதி ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: ஆண்டுதோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 20 ஆம் தேதி ஊட்டியில் மலர் கண்காட்சி துவங்குகிறது. இந்த மலர் கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து வரும் 19 ஆம் தேதி கோவை வருகை வரவுள்ளார். அன்னூர் அருகே பெரியபுத்தூரில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் புதிய போர் வெல்களை, முதல்வர் இயக்கி துவக்கி வைக்க உள்ளார்.

மேலும், பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் விவசாயிகளுடன், முதல்வர் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையினரும் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் போர்வெல்கள் அமைய உள்ள மதுவாணன் குட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ள பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...