ஊட்டி அருகே ஆலங்கட்டி மழை: 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் சேதம்

ஊட்டி அருகே பெய்த ஆலங்கட்டி மழைக்கு, 200 ஏக்கரில் பயிரிட்ட மலை காய்கறிகள் சேதமானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே இடுஹட்டி சுற்று வட்டார பகுதிகளான மொரக்குட்டி, கொதுமுடி, கக்குச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில், ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

இப்பகுதிகளில், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளை பூண்டு தோட்டங்கள் அதிகளவில் உள்ள நிலையில், நேற்று பெய்த மழையில், மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. அங்கு வைக்கப்பட்ட, 15 மோட்டார்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பயிர் சேதமான பகுதிகளில் தோட்டக்கலை துறையினர், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து இடுஹட்டி ஊர் தலைவர் பெள்ளி நிருபர்களிடம் கூறுகையில், இடுஹட்டியில் இரண்டு நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார், 200 ஏக்கர் மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதமானது. தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம், என்றார்.

இது குறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், மழையால் பயிர் சேதமான பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...