ஊட்டி அருகே பெய்த ஆலங்கட்டி மழைக்கு, 200 ஏக்கரில் பயிரிட்ட மலை காய்கறிகள் சேதமானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே இடுஹட்டி சுற்று வட்டார பகுதிகளான மொரக்குட்டி, கொதுமுடி, கக்குச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில், ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.
இப்பகுதிகளில், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளை பூண்டு தோட்டங்கள் அதிகளவில் உள்ள நிலையில், நேற்று பெய்த மழையில், மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. அங்கு வைக்கப்பட்ட, 15 மோட்டார்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பயிர் சேதமான பகுதிகளில் தோட்டக்கலை துறையினர், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து இடுஹட்டி ஊர் தலைவர் பெள்ளி நிருபர்களிடம் கூறுகையில், இடுஹட்டியில் இரண்டு நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார், 200 ஏக்கர் மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதமானது. தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம், என்றார்.
இது குறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், மழையால் பயிர் சேதமான பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.
இப்பகுதிகளில், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளை பூண்டு தோட்டங்கள் அதிகளவில் உள்ள நிலையில், நேற்று பெய்த மழையில், மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. அங்கு வைக்கப்பட்ட, 15 மோட்டார்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பயிர் சேதமான பகுதிகளில் தோட்டக்கலை துறையினர், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து இடுஹட்டி ஊர் தலைவர் பெள்ளி நிருபர்களிடம் கூறுகையில், இடுஹட்டியில் இரண்டு நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார், 200 ஏக்கர் மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதமானது. தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம், என்றார்.
இது குறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், மழையால் பயிர் சேதமான பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.