குன்னூரில் கார் மோதி காட்டெருமை பலி

குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மோதிய சம்பவத்தில், காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மோதிய சம்பவத்தில், காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது, சாலையை கடந்த காட்டெருமை மீது கார் மோதி உள்ளது.

அதில், காட்டெருமையின் தாடை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த விபத்தில் காரும் சேதமடைந்தது. இரவு நேரம் மற்றும் மழை பெய்ததால் , இறந்த காட்டெருமையை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர், இன்று காலை பொக்லைன் வரவழைக்கப்பட்டு, இறந்த காட்டெருமை உடல், வனத்துறை ஓய்வு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரேஞ்சர் சசிகுமார் முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தார்.

இந்த விபத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...