குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மோதிய சம்பவத்தில், காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மோதிய சம்பவத்தில், காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது, சாலையை கடந்த காட்டெருமை மீது கார் மோதி உள்ளது.
அதில், காட்டெருமையின் தாடை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த விபத்தில் காரும் சேதமடைந்தது. இரவு நேரம் மற்றும் மழை பெய்ததால் , இறந்த காட்டெருமையை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர், இன்று காலை பொக்லைன் வரவழைக்கப்பட்டு, இறந்த காட்டெருமை உடல், வனத்துறை ஓய்வு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரேஞ்சர் சசிகுமார் முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தார்.
இந்த விபத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது, சாலையை கடந்த காட்டெருமை மீது கார் மோதி உள்ளது.
அதில், காட்டெருமையின் தாடை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த விபத்தில் காரும் சேதமடைந்தது. இரவு நேரம் மற்றும் மழை பெய்ததால் , இறந்த காட்டெருமையை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர், இன்று காலை பொக்லைன் வரவழைக்கப்பட்டு, இறந்த காட்டெருமை உடல், வனத்துறை ஓய்வு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரேஞ்சர் சசிகுமார் முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தார்.
இந்த விபத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.