கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும் 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் "நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில் நடந்த கலை நிகழ்ச்சியைப் போன்று கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


கோவை: சென்னையைப் போன்று கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும் 'நம்ம ஊரு திருவிழா" நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதக் கூட்டத்தின் போது கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், உலகெங்கும் தமிழகத்தின் நாட்டுப்புற கலை வடிவங்களை அறிய செய்யவும் 2021-22-ஆம் ஆண்டு பிரமாண்ட கலை விழா "நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில் சென்னையில் நடத்தப்பட்டது.

நம்ம ஊரு திருவிழா

அதே போன்று கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நம்ம ஊரு திருவிழாக்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞா்கள் மாவட்ட வாரியாக நடத்தப்படும் விழாக்கள் மூலம் தோந்தெடுக்கப்படுவா்.

ரூ.6 கோடி ஒதுக்கீட்டில் நடத்தப்படும், இவ்விழா மூலம் தமிழகத்தின் அரிய கலை வடிவங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், அவற்றை வளர்க்கும், கலை வாய்ப்புகள் வழங்கி கலைஞா்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வாய்ப்பாக அமையும்.

மேலும், பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அரசு கவின் கலைக் கல்லூரி புனரமைப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

பாரம்பரிய கட்டடத்தில் செயல்படும் நாட்டின் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றான சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் கட்டிடம், அதன் பாரம்பரிய அழகு மாறாமல் புது பொலிவூட்டும் வகையில் ரூ.7.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படும்.

அதேபோல ரூ.15.68 கோடி நிதி ஒதுக்கீட்டில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி துறைகள் மற்றும் வகுப்பறைகளுக்கு புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள், கணினி கூடம் கலையரங்கம், மாணவ மாணவியர் விடுதிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கல்லூரியின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்படும்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகள், இசை பள்ளிகள் மற்றும் ஜவஹா் சிறுவா் மன்றங்களுக்கு இசைக்கருவிகள், மின்னணு சாதனங்கள், துணை சாதனங்கள், கணினி கூடங்கள், மென்பொருட்கள், ஒலிப்பதிவு கூடங்கள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வழங்கி கற்பித்தல் தரம் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், ஆண்டு அரசு நல்கை ரூ.3 கோடியாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...