கோவை தடாகம் அருகே மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

இன்று மதியம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்ததால், அவர் மரத்தின் அடியில் ஓதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.



கோவை: கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (56). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்ததால், அவர் மரத்தின் அடியில் ஓதுங்கியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், ரங்கராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தடாகம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம், ரங்கராஜ் அருகே நின்று கொண்டிருந்த வீரன் என்பவரையும் மின்னல் தாக்கியதில், அவருக்கு கையில் சிறிது காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில் அவர் உயிர் தப்பினார்.

கோவையில் பட்டப்பகலில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...