'ஏஜிஎஸ் ஹெல்த் கேர்' முதலாம் ஆண்டை முன்னிட்டு கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம்..!

கோயம்புத்தூர் பிரஸ் கிளப் மற்றும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனை இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.



கோவை: கோயம்புத்தூர் பிரஸ் கிளப் மற்றும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனை இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. 



இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார். 

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வருடத்தில் அனைத்து நாட்களும், வெயில், மழை பாராமல் களத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் நலனை கருதி, இந்த முகாமை கோயம்புத்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முகாமில், இரத்த அழுத்தம், சக்கரை நோய் பரிசோதனைகள், தோல் வியாதி சமந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த உணவு பழக்க வழக்கங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பத்திரிக்கையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. 

"கொரோனா தொற்று காலத்திலும் கடினமான பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களாக திகழும் பத்திரிக்கையாளர்களுக்கு, உடல் நல பாதுகாப்பு அளிக்க இது சரியான தருணம். 

மக்களிடையே ரத்த அழுத்தம், சர்க்கரையால் ஏற்படும் சிக்கல்கள் (நோயால் பாதிப்பு மற்றும் இறப்புக்கான வாய்ப்பு) பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இது அவர்களின் குடும்பத்தினரில் பொருளாதாரத்தை மிகவும் பாதிப்படையச் செய்யும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை அளிக்க முடியும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய சிபாரிசு செய்கிறோம். எந்த நோயையும் வருமுன் காப்பது சிறப்பானது", என்று ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர். ஆதித்யன் குகன் துவக்க உரையாற்றினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...