கோவையில் அடுமனை தொழில்நுட்பம் (Bakery technology) குறித்து 2 நாட்கள் பயிற்சி முகாம்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைத் தொழில்நுட்பம் பற்றிய 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ரூ.1500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


கோவை: அடுமனைத்‌ தொழில்நுட்பம்‌ பற்றிய இரண்டு நாட்கள்‌ பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வருகிற 09.05.2022 மற்றும்‌ 10.05.2022 ஆகிய தேதிகளில்‌ நடைபெறகிறது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் வெளியிட்டயுள்ள செய்திக்குறிப்பில்,

"அடுமனை உணவுப்‌ பொருட்களுக்கு (Bakery Products) தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான, முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌, பல்சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதே ஆகும்.

வளர்ந்து வரும்‌ இவ்வடுமனைத்‌ தொழில்நுட்பங்கள்‌ சிறுதொழில்‌ முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்க பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, பயிற்சியின் போது கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்களான, 1. ரொட்டி வகைகள் 2. கேக்‌ மற்றும்‌ பிஸ்கட்‌ 3. பப்ஸ்‌, கட்லெட்‌ மற்றும்‌ சமோசா ஆகியவை எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ள தொழில்முனைவோர்‌ மற்றும்‌ ஏனைய ஆர்வலர்கள்‌ ரூ.1,500 + 18% GST செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌:

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌கல்லூரிமற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...