மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வேண்டும்: கோவையில் சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித் தருகிற துறையாக டாஸ்மாக் நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மதுபான பெட்டிகளை, ஏற்றுவதற்கு கூலியை உயர்த்தி தர வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போது, ஒரு மதுவகை பெட்டியை ஏற்றுவதற்கு கூலியாக ரூ.1.45 பைசா தரப்படுகிறது. ஒரு பெட்டிக்கு ஏற்று கூலி ரூ. 3.50 வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமை பணி தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு வகையான கூலி வழங்கப்படுகிறது, என்று குற்றம்சாட்டினர்.

எனவே,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான அதிகபட்ச கூலி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை, பீளமேடு டாஸ்மாக் குடோன் முன்பு சிஐடியு டாஸ்மாக் சுமை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஏற்றுக் கூலி வழங்க வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜகாங்கிர் தலைமை தாங்கினார்.

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர், ராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...