'தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது'- பல்லக்கு தடையை நீக்குங்க.. பேரூர் ஆதீனம் வலியுறுத்தல்..!

தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் சென்று அருளாசி வழங்க அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும், இது போன்று இருக்க கூடிய தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதித்துள்ள தடையை அரசு நீக்குவதோடு, தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. பழமையான சைவ ஆதீனமான இங்கு 27-வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.

இவர் 2019-ல் பதவியேற்ற போது மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழ்ச்சி நடந்தது. வெள்ளிப் பல்லக்கில் ஆதீன கர்த்தர் அமர்ந்து இருக்க மக்கள் அவரை சுமந்து வந்தனர்.

அதன்பிறகு வைத்தீஸ்வரன் கோவில், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திராவிடர் கழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு ஆதீனங்கள், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தடை விதிக்கப்பட்டதற்குக் கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

நமது சமயம் மிக தொன்மையானது. ஏராளமான சம்பிரதாயங்களை கொண்டது. குறிப்பாகச் சைவ சமயத்தில் பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கோவில்களைப் போல் ஆதினங்களிலும், மடங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு இது நீண்டகாலம் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறையாகும்.

இதில் கொத்தடிமை முறையோ, ஆண்டாள் அடிமை முறையோ, மக்களைத் துன்புறுத்தும் முறையோ ஏதும் இல்லாமல் 'குருவே சிவம்' என சீடர்கள் சுற்றி வருகின்றனர். இது மரபு. இதற்குத் தடை விதித்திருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...