1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
கோவை: கோவை மாநகரில் பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீஸ் கமிஷனரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக போலீசில், 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் மொத்தம், 25-ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். இதில், 10-ஆண்டுகள் ஏட்டுக்களாக பணியாற்றி இருக்க வேண்டும். இதன்படி கோவை மாநகரில், 151-பேர் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர்.

இவர்களில், 136-பேர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களிலும், நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

மீதி 15-பேர் ஆயுதப்படையில் ஏட்டுக்களாக பணியாற்றி வந்தனர்.

பதவி உயர்வு பெற்ற, 136-பேர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
தமிழக போலீசில், 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் மொத்தம், 25-ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். இதில், 10-ஆண்டுகள் ஏட்டுக்களாக பணியாற்றி இருக்க வேண்டும். இதன்படி கோவை மாநகரில், 151-பேர் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இவர்களில், 136-பேர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களிலும், நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
மீதி 15-பேர் ஆயுதப்படையில் ஏட்டுக்களாக பணியாற்றி வந்தனர்.
பதவி உயர்வு பெற்ற, 136-பேர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.