கோவை தடாகம் அருகே இறந்த நிலையில் பெண் யானை - ஆந்த்ராக்ஸ் நோய் இல்லை என உறுதி…!

கோவை தடாகம் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதுள்ளது.



கோவை: கோவை தடாகம் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதுள்ளது.

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு தடாகம் காப்புக்காடு அருகே வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது.

மேலும், யானை இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால், யானையின் உடலில் திரவம் வழிவது போன்ற சுவடு இருந்துள்ளது. 



எனவே, இறந்த யானைக்கு ஆந்திராக்ஸ் பாதிப்பு இருக்கலாம், என வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர்.



இதனால், மாஸ்க் போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இறந்த யானையின் அருகே சென்று திரவ மாதிரிகளை ஆந்த்ராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 



பரிசோதனையின் முடிவில், யானைக்கு ஆந்திராக்ஸ் இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து, மாலை நேரம் ஆனதால், நாளை காலை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு நடைபெறும், என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இறந்தது பெண் யானை என்பதால், யானை கர்ப்பமாக உள்ளதா? என்பது உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், சிறுமுகை வனச்சரகம், பவானி அணை நீர் தேக்கம் அருகே ஒரு பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்டு குட்டியுடன் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கோவை வனக்கோட்டத்தில் ஒரு பெண் யானை இறந்துள்ளது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...