12-ம் வகுப்பு பொது தேர்வு: கோவை வால்பாறையில் 512-பேர் தேர்வு எழுதுகின்றனர்..!

வால்பாறையில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512- பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


கோவை: வால்பாறையில் 3-தேர்வு மையங்களில் 512 பிளஸ் +2 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2-வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இதில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையாறு அணை மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

12-வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுப்பதற்கு சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் பறக்கும் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...