போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.5-லட்சம் மோசடி செய்த புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் மீது இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை: போலந்து நாட்டில் வேலை எனக்கூறி ரூ.3.5-லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் டாக்டர் முனுசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விஷ்ணுராம் (27). பட்டதாரி இளைஞர். இந்நிலையில், இவர் கோவை புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐசிசி இமிகரேஷன் கன்சல்டன்ட் என்ற தனியார் நிறுவனத்தை அணுகி தனக்கு வேலை வாய்ப்பு வந்தால் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.3.5 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஷ்ணுராமை அந்த நிறுவனத்தினர் போலந்து நாட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
ஆனால் இவர்கள் கூறிய அந்த ஐடி நிறுவனம் அங்கு இல்லாததால், மீண்டும் அவர் இந்தியா திரும்பி வந்துள்ளார். பின்னர் தான் கொடுத்த ரூ.3.5-லட்சத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விஷ்ணுராம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் டாக்டர் முனுசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விஷ்ணுராம் (27). பட்டதாரி இளைஞர். இந்நிலையில், இவர் கோவை புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐசிசி இமிகரேஷன் கன்சல்டன்ட் என்ற தனியார் நிறுவனத்தை அணுகி தனக்கு வேலை வாய்ப்பு வந்தால் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.3.5 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஷ்ணுராமை அந்த நிறுவனத்தினர் போலந்து நாட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
ஆனால் இவர்கள் கூறிய அந்த ஐடி நிறுவனம் அங்கு இல்லாததால், மீண்டும் அவர் இந்தியா திரும்பி வந்துள்ளார். பின்னர் தான் கொடுத்த ரூ.3.5-லட்சத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விஷ்ணுராம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.