பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு: கோவை சேரன்மாநகர் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு..!

பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளாங்குறிச்சி, சேரன்மாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.


கோவை: சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் காரணமாக விளாங்குறிச்சி, சேரன்மாநகர், விசுவாசபுரம், பூங்கா நகர் பாலாஜி நகர், LN நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

• குடிநீர் விநியோக சுழற்சி பாதிப்பு!

22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு கூறியதாவது:-



பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பணிகள் நிறைவடைந்தாலும் பில்லூரிலிருந்து முதலில் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். அதன்பின் அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற வேண்டும்.

அதற்கு பின்பு தான் குடியிருப்பு பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஒவ்வொருமுறையும் குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் போது தண்ணீர் விநியோகம் செய்யும் சுழற்சி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே குடியிருப்பு பகுதிகளுக்கு வழக்கமாக குடிநீர் வினியோகம் செய்யும் நாட்களுக்கு இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும்.

குடிநீர் வினியோகம் துவங்கினால் அடுத்த சுழற்சி முதல் குடிநீர் வினியோகம் செய்யும் இடைவெளி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். கோடை காலத்தில் இதுபோன்று எதிர்பாராத சம்பவங்களால் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும் இப்பிரச்சினை சீராகும் வரை மக்கள் தண்ணீரை சிக்கனமாகவும், தற்காலிகமாக மாற்று ஏற்பாடும் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...