மூட்டை, மூட்டையாக 'ரேஷன் அரிசி' பதுக்கல்: கோவை ரத்தினபுரியில் வீட்டில் 2.7-டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!

சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ரத்தினபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை ரத்தினபுரி பகுதியில் பொது விநியோக ரேஷன் அரிசிகளை சிலர் மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்ததாக உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை ரத்தினபுரி ஐசக் வீதியில் உள்ள குமார் என்பவரது வீட்டில் உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வீட்டின் உள்ளே மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மூட்டைக்கு தலா 50-கிலோ வீதம், 55-மூட்டைகள் என சுமார் 2.7-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...