சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை ரத்தினபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை ரத்தினபுரி பகுதியில் பொது விநியோக ரேஷன் அரிசிகளை சிலர் மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்ததாக உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை ரத்தினபுரி ஐசக் வீதியில் உள்ள குமார் என்பவரது வீட்டில் உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் உள்ளே மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மூட்டைக்கு தலா 50-கிலோ வீதம், 55-மூட்டைகள் என சுமார் 2.7-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி பகுதியில் பொது விநியோக ரேஷன் அரிசிகளை சிலர் மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்ததாக உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை ரத்தினபுரி ஐசக் வீதியில் உள்ள குமார் என்பவரது வீட்டில் உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் உள்ளே மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மூட்டைக்கு தலா 50-கிலோ வீதம், 55-மூட்டைகள் என சுமார் 2.7-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.