வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் 100-டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.