கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லைகளிலிருந்து, வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் இணைப்பை துண்டிக்கவும், கூட்டு கண்காணிப்பு குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பரம்பிக்குளம் பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் எடுக்கப்படுவதால் கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து, அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை மற்றும் மின்சார வாரியம் அடங்கிய கூட்டுப் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் கூட்டுக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பரம்பிக்குளம் பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் எடுக்கப்படுவதால் கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து, அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை மற்றும் மின்சார வாரியம் அடங்கிய கூட்டுப் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் கூட்டுக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.