பரம்பிக்குளம் - ஆழியாறு பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை!

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லைகளிலிருந்து, வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் இணைப்பை துண்டிக்கவும், கூட்டு கண்காணிப்பு குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பரம்பிக்குளம் பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் எடுக்கப்படுவதால் கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

தொடர்ந்து, அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை மற்றும் மின்சார வாரியம் அடங்கிய கூட்டுப் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் கூட்டுக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...