'எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு'- கோவையில் எல்ஐசி ஊழியர்கள் நடத்திய இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம்..!

இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கோவை மாநகரில் எட்டு இடங்களில் 11-மணி முதல் 1-மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.



கோவை: எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து கோவையில் எல்ஐசி ஊழியர்கள் 2-மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்டமாக பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் ஆகியோருக்கான பங்கு விற்பனை இன்று தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதைத்தொடர்ந்து கோவையிலும் திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கோவை மாநகரில் எட்டு இடங்களில் 11 மணி முதல் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...